Friday, April 8, 2011

வீ.கே.புதூர் பகுதியில் ராதிகாசெல்வி பிரசாரம்


வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகாசெல்வி பிரசாரம் செய்தார்.தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளராக கருப்பசாமிபாண்டியன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுகள் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகாசெல்வி பிரசாரம் செய்தார். தொகுதியில் அடங்கிய இ.மீனாட்சிபுரம், ராஜகோபாலபேரி, அதிசயபுரம், நாச்சியார்புரம், சோலைசேரி, கருவந்தா, லெட்சுமிபுரம், அச்சங்குன்றம், பரங்குன்றாபுரம், வாடியூர், கீழக்கலங்கல், மேலக்கலங்கல், ஊத்துமலை, மருக்காலன்குளம் பகுதிகளில் ஓட்டுகள் சேகரித்தார்.

பிரசாரத்தின்போது தமிழ்நாடு காங்., பொது செயலாளர் சார்லஸ், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சேசுராஜன், தமிழ்நாடு காங்., தொழிலாளர் யூனியன் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் முத்தையா, கிளை செயலாளர்கள் வீராணம் பாலமுருகன், இருதாலய மருதப்பபாண்டியன், அதிசயபுரம் சைமன், ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர் லக்குமணன், பழனி, முத்துராமன், வெள்ளத்துரை, மாவட்ட பிரதிநிதி மரியராஜ், முருகராஜ், சுப்பையாபாண்டியன் உட்பட கூட்டணி தொண்டர்கள் உடன் சென்றனர்.

No comments:

Post a Comment